பதிவு செய்த நாள்
28 நவ2011
09:17
கோயம்பேடு : கனமழை பெய்து வரும் நிலையில், வரத்து குறைவினால் கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட், அவரை, முருங்கைகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், விலை உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையில், பெரிய மாற்றமில்லை.கர்நாடகா மாநிலம் மற்றும் ஊட்டி, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேரட் வரத்து பெருமளவில் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு, 15 லாரிகள் வர வேண்டிய நிலையில், 7 லாரிகளில் மட்டுமே வரத்துள்ளது. இதனால், அதன் விலை, கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு, 30லிருந்து 35 ரூபாய் உயர்ந்து, நேற்றைய தினம் கிலோ, 40 ரூபாய் என உயர்ந்தது. அவரையின் விலை கிலோ, 35 ரூபாய் எனவும், முருங்கைக்காயின் விலை கிலோ, 30 ரூபாய் எனவும், மகாராஷ்டிரா பெல்லாரியின் விலை, 18 ரூபாய் எனவும், சாம்பார் வெங்காயம், 30 ரூபாய் எனவும் உயர்ந்தது.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ஒன்றுக்கு உருளைக்கிழங்கு, 15, காலிபிளவர், 18, கோஸ், 10, பீன்ஸ், 18, நூக்கல், 13, முள்ளங்கி, 12, சவ்சவ், 13, கத்தரிகாய், 15, வெண்டைகாய், 13, புடலை, 17, பாவற்காய், 15, பச்சை மிளகாய், 12, சேனை, 15, சேம்பு,10 என, நேற்று விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்களில், மொத்த விலையிலிருந்து கூடுதலாக, 10 முதல் 15 ரூபாய் வரை விலை அதிகரித்து, சில்லரை வியாபாரிகள், விற்பனை செய்து வருகின்றனர். காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரி சவுந்தர ராஜன், கூறுகையில், ""மழையின் காரணமாக சில காய்கறிகளின் வரத்து மட்டுமே குறைந்து, அவற்றின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி, மார்க்கெட்டிற்கு 300 லாரிகளுக்கு குறையாமல் வரத்துள்ளது.,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|