பதிவு செய்த நாள்
28 நவ2011
16:11
ஷில்லாங் : மேகாலயாவில் உள்ள கிராமப்புற மக்களின் வசதிக்காக நடமாடும் வங்கி சேவையை எஸ்.பி.ஐ., இன்று அறிமுகம் செய்துள்ளது. மேகாலயா கிராமப்புற மேம்பாட்டு கழகமும், ஷில்லாங் எஸ்.பி.ஐ., கிளையும் இணைந்து இந்த சேவையை செய்ய உள்ளன. இதன் மூலம் வங்கி பணியாளர்கள் வாகனங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று, வங்கி சேவை மேற்கொள்ள உள்ளனர். வங்கி வசதி இல்லாத புறநகர் பகுதி மக்களுக்கு வங்கி சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ., மேலாண் இயக்குநர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 662 கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவை கிடைக்க செய்ய உள்ளதாகவும், ஏற்கனவே 496 கிராமங்களில் இந்த சேவையை நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|