பதிவு செய்த நாள்
29 நவ2011
09:22
புதுடில்லி : போஷ் லிமிடெட் நிறுவனம், ஆஃப்டர்மார்க்கெட் வர்த்தகத்தில் ரூ. 250 கோடியை முதலீடு செய்வதன் மூலம், அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 3 ஆயிரம் கோடி அளவிற்கு வருமானத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தி்த்த போஷ் லிமிடெட் ( ஆட்டோமோட்டிவ் ஆஃப்டர்மார்க்கெட் பிரிவு) துணை தலைவர் எஸ். முரளிதரன் கூறியதாவது, நடப்பு நிதியாண்டில், ஆஃப்டர்மார்க்கெட்டின் மூலம், ரூ. 2 ஆயிரம் கோடி அளவிற்கு வருமானத்தை ஈட்டியுள்ளது. தற்போது 11 என்ற அளவில் உள்ள மெக்கானிக்ஸ் டிரெய்னிங் சென்டர்களை, 15 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், தேசிய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் கார் உற்பத்தி அதிகரிக்கும். இதற்காக, 500 என்ற அளவில் உள்ள கார் சர்வீஸ் சென்டர்களை, 750 முதல் 800 என்ற அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|