தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ... ஓ.என்.ஜி.சி: 2வது பங்கு வெளியீட்டில் மீண்டும் சிக்கல் ஓ.என்.ஜி.சி: 2வது பங்கு வெளியீட்டில் மீண்டும் சிக்கல் ...
சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் சோதனைக்கு மெகா ஸ்கேனர்-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2011
00:02

சென்னை துறைமுகத்தில், கன்டெய்னர்களை சோதனையிட, பிரமாண்ட ஸ்கேனர் சாதனத்தை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை சுங்கத்துறை தலைமை ஆணையர் மாலா ஸ்ரீவத்சவா கூறியதாவது:நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக சென்னை துறைமுகம் விளங்குகிறது. இந்த துறைமுகம் கடந்த சில மாதங்களாக சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதில், கடுமையான இடநெருக்கடியை சந்தித்து வருகிறது. இருந்த போதிலும், துறைமுகம் வாயிலான சுங்கத் துறையின் வருவா#, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 20 சதவீதம் உயர்ந்து, இலக்கு அளவான, 27 ஆயிரத்து 5 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற நிதியாண்டில், 22 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. துறைமுகத்தில் உள்ள இரண்டு தனியார் சரக்கு பெட்டக முனையங்களில், கடந்த பல மாதங்களாக ஏற்பட்டுள்ள இடநெருக்கடியால், வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், சுங்கத்துறையின் வருவாயில், பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், சர்வதேச பொருளாதார நெருக்கடியால், வருவாய்வளர்ச்சி சற்று மந்தமாக உள்ளது.சர்வதேச நடைமுறைப்படி, சென்னை துறைமுகத்தில், கன்டெய்னர்களை சோதனையிட, பிரமாண்டமான ஸ்கேனர் பொருத்த முடிவு செ#யப்பட்டுள்ளது. இதன் மூலம், 10-12 சதவீத கன்டெய்னர்கள் சோதனையிடப்படும். இதனால், சரக்குகளை ஆய்வு செய்யும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். இது போன்ற ஸ்கேனர், நவிமும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்தில், கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது.அதிகாரிகளின் மதிப்பீட்டிற்கு பதிலாக, இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், முகவர்கள் ஆகியோர், தங்களின் சரக்கு குறித்த சுயமதிப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை, நல்ல பலனை அளித்துள்ளது. இது, ஏற்றுமதி, இறக்குமதிக்கான ஒப்புதலை விரைவாக வழங்க வகை செய்துள்ளது. இவ்வாறு மாலா ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)