பதிவு செய்த நாள்
06 டிச2011
00:02
சென்னை துறைமுகத்தில், கன்டெய்னர்களை சோதனையிட, பிரமாண்ட ஸ்கேனர் சாதனத்தை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னை சுங்கத்துறை தலைமை ஆணையர் மாலா ஸ்ரீவத்சவா கூறியதாவது:நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக சென்னை துறைமுகம் விளங்குகிறது. இந்த துறைமுகம் கடந்த சில மாதங்களாக சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதில், கடுமையான இடநெருக்கடியை சந்தித்து வருகிறது. இருந்த போதிலும், துறைமுகம் வாயிலான சுங்கத் துறையின் வருவா#, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 20 சதவீதம் உயர்ந்து, இலக்கு அளவான, 27 ஆயிரத்து 5 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, சென்ற நிதியாண்டில், 22 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. துறைமுகத்தில் உள்ள இரண்டு தனியார் சரக்கு பெட்டக முனையங்களில், கடந்த பல மாதங்களாக ஏற்பட்டுள்ள இடநெருக்கடியால், வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், சுங்கத்துறையின் வருவாயில், பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், சர்வதேச பொருளாதார நெருக்கடியால், வருவாய்வளர்ச்சி சற்று மந்தமாக உள்ளது.சர்வதேச நடைமுறைப்படி, சென்னை துறைமுகத்தில், கன்டெய்னர்களை சோதனையிட, பிரமாண்டமான ஸ்கேனர் பொருத்த முடிவு செ#யப்பட்டுள்ளது. இதன் மூலம், 10-12 சதவீத கன்டெய்னர்கள் சோதனையிடப்படும். இதனால், சரக்குகளை ஆய்வு செய்யும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். இது போன்ற ஸ்கேனர், நவிமும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகத்தில், கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது.அதிகாரிகளின் மதிப்பீட்டிற்கு பதிலாக, இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், முகவர்கள் ஆகியோர், தங்களின் சரக்கு குறித்த சுயமதிப்பீட்டு ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை, நல்ல பலனை அளித்துள்ளது. இது, ஏற்றுமதி, இறக்குமதிக்கான ஒப்புதலை விரைவாக வழங்க வகை செய்துள்ளது. இவ்வாறு மாலா ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|