பதிவு செய்த நாள்
06 டிச2011
00:06
புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., நிறுவனம் 2வது பங்கு வெளியீடு மேற்கொள்வதில், மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில், 3 சுயேச்சை இயக்குனர்கள் நியமிக்கப்பட்ட பின்னரே, பங்கு வெளியீடு மேற்கொள்வது குறித்து, முடிவு செ#யப்படும் என, மத்திய நிதியமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஓ.என்.ஜி.சி., நிறுவனம், 2வது பங்கு வெளியீட்டின் மூலம், மத்திய அரசின் 5 சதவீத பங்குகளை விற்பனை செ#து, 12 ஆயிரம் கோடி ரூபாய்திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்நிறுவனத்தின் சுயேச்சை இயக்குனர் நியமனத்தில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகவும், இந்திய பங்குச் சந்தை நிலையில்லாமல் அதிக ஏற்ற, இறக்கமாக உள்ளதாலும், பங்கு வெளியீடு பல முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் மூன்று சுயேச்சை இயக்குனர்கள், சென்ற மாதம் 10ம் தேதி ஓ#வு பெற்றனர். இந்த காலியிடங்களுக்கு, புதிய இயக்குனர்களை நியமிப்பது குறித்து, மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செ#யும். அதன் பிறகே, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், 2வது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள முடியும்.
ஆனால், இது குறித்து இன்னும் மத்திய அமைச்சரவைக்குழு எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால், பங்கு வெளியீடு மேலும், சில காலம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது.
எனினும், அடுத்த மாதத் தொடக்கத்தில், பங்கு வெளியீடு இருக்கும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.ஓ.என்.ஜி.சி., இரண்டாவது முறையாக பங்கு வெளியீடு மேற்கொள்ளும்பட்சத்தில், அந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் தற்போதைய, 74.14 சதவீதத்தில் இருந்து, 69.14 சதவீதமாக குறையும்.பொதுத்துறை நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில், 50 சதவீதம் சுயேச்சை இயக்குனர்கள் இடம்பெற வேண்டும் என, "செபி' உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை பின்பற்றாத நிறுவனங்கள், பங்கு வெளியீடு மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான, பீ.எச்.இ.எல்., ஆர்.ஐ.என்.எல்., ஹிந்துஸ்தான் காப்பர், என்.பீ.சி.சி., ஆகியவற்றில், போதுமான சுயேச்சை இயக்குனர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், பங்கு வெளியீடு மேற்கொள்ள முடியாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|