பதிவு செய்த நாள்
18 டிச2011
05:06
புதுடில்லி : நடப்பு 2011ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், பிரிண்டர், காப்பியர் மற்றும் பன்முக பயன்பாட்டு சாதனங்கள் விற்பனை, 6 லட்சத்து 66 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 2.4 சதவீதம் அதிகம் என, ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது. இந்தியாவின், ஒட்டுமொத்த பிரிண்டர்கள் மற்றும் காப்பியர் சந்தையில், எச்.பி., கேனன், எப்சன் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, 93 சதவீதம் என்றளவில் உள்ளது.
இதில், எச்.பி., நிறுவனம், 51 சதவீத பங்களிப்புடன், இந்திய பிரிண்டர் சந்தையில் முதலிடத்தில் உள்ளது. கேனன் (24.4 சதவீதம்), எப்சன் (9 சதவீதம்) மற்றும் சாம்சங் (8.5 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பன்முக பன்பாட்டு வசதி கொண்ட, "ஏ4' பிரிண்டர் சந்தையிலும், எச்.பி. நிறுவனம், 58 சதவீத பங்களிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தைத் தொடர்ந்து, கேனன் (20.6 சதவீதம்), சாம்சங் மற்றும் எப்சன் நிறுவனங்கள் (7.6 சதவீதம்) என்றளவில் சந்தை பங்களிப்பை கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|