பதிவு செய்த நாள்
19 டிச2011
09:31
புதுடில்லி:"வருமான வரித் துறையில் உள்ள இரு பிரிவுகளுக்கிடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால், 4, 500 கோடி ரூபாய் வரிப்பாக்கி இன்னும் வசூலிக்கப்படாமல் உள்ளது' என, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.மத்திய தலைமை கணக்கு தணிக்கை துறை அதிகாரி, பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "வருமான வரித் துறையில் உள்ள மதிப்பீட்டு அதிகாரிகளுக்கும், வரி மீட்பு அதிகாரிகளுக்கும் இடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லை. ஒரு லட்சத்து, 54 ஆயிரத்து, 198 வழக்குகளில், 4,543 கோடி ரூபாய் வரிப்பாக்கி வசூலிக்க வேண்டியுள்ளது. இந்த விவரம், மதிப்பீட்டு அதிகாரிகளிடமிருந்து, வரி மீட்புத் துறையிடம் தெரிவிக்கப்படவில்லை. இரு துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, உயர் அதிகார அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|