பதிவு செய்த நாள்
19 டிச2011
10:34
புதுடில்லி:"அடுத்த ஐந்தாண்டு காலத்தில் மின் துறையில் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்' என, மின் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:அடுத்த ஐந்தாண்டுகளில் 94 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 13.72 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. 75 ஆயிரம் மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரமாக இருக்கும்.இந்த திட்டத்துக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அனல் மின் நிலையங்கள் மூலம் 63 ஆயிரத்து 781 மெகாவாட்டும், நீர்மின் நிலையங்கள் மூலம் 9 ஆயிரத்து 200 மெகாவாட்டும், அணுசக்தி மூலம் 2 ஆயிரத்து 800 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கால கட்டத்தில் மின் துறைக்கு 4 லட்சத்து 7 ஆயிரம் பேர் தேவைப்படுகிறது. இதில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் தொழில் நுட்ப பிரிவுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.இவ்வாறு மின் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|