ஒனிடாவின் 3டீ ஸ்மார்ட் "டிவி'ஒனிடாவின் 3டீ ஸ்மார்ட் "டிவி' ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
அரிசி ஏற்றுமதி 70 லட்சம் டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2011
00:11

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் அரிசி ஏற்றுமதி, 70 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 3 மடங்கு அதிகமாகும் என, சர்வதேச தரக் குறியீட்டு முகமை நிறுவனமான, "கிரிசில்' தெரிவித்துள்ளது.
நெல் உற்பத்திநடப்பு 2011-12ம் பருவத்தில் (அக்டோபர் - செப்டம்பர்), உள்நாட்டில், பாசுமதி அல்லாத சாதாரண நெல் உற்பத்தி நல்ல அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சாதாரண அரிசி ஏற்றுமதி மீதான தடையை விலக்கிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. எனவே, கடந்த ஆண்டை விட, நடப்பு நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி, சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழ்நிலையில், சர்வதேச அளவில் அதிகளவில் நெல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளான தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நெல் உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உலகளவில் நெல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக, நெல் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இது, இந்தியாவிற்கு சாதகமான அம்சமாகும்.
மதிப்பீடு
கிரிசில் நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, சர்வதேச அரிசி வர்த்தகத்தில், இந்தியாவின் அரிசி வர்த்தகம் நடப்பு 2011-12ம் ஆண்டில், மூன்று மடங்கு அல்லது 21 சதவீதம் வளர்ச்சிகண்டு, 70 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2010-11ம் ஆண்டில், 7 சதவீத வளர்ச்சியுடன், 22 லட்சம் டன்னாக இருந்தது என, கிரிசில் அமைப்பின் நிறுவனத்தின் குருபிரிப் சத்வால் தெரிவித்தார்.
உள்நாட்டில், அதிகளவில் நெல் உற்பத்தியாகும் மாநிலங்களில், சாதகமான பருவ நிலையால், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நெல் உற்பத்தி, 10 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் உற்பத்தியை விட, 6 சதவீதம் அதிகமாகும்.உற்பத்தி இலக்குஅதேசமயம், மத்திய அரசின் வேளாண் அமைச்சகம், நடப்பு வேளாண் பருவத்தில் , 10.20 கோடி டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2010-11ம் பருவத்தில், நெல் உற்பத்தி, 9.53 கோடி டன்னாக இருந்தது.இந்நிலையில், மத்திய அரசு, அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்க திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு, அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் வகையில், கூடுதலாக, 200 கோடி டாலர் வருவாய் கிடைக்கும் என, சத்வால் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)