பதிவு செய்த நாள்
21 டிச2011
00:11
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக தினமான செவ்வாய் கிழமையன்றும் மிகவும் மந்தமாகவே இருந்தது. ஐரோப்பா மற்றும் ஒரு சில ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. ஆனால், உள்நாட்டில், அடிப்படை காரணிகள் நன்கு இல்லாததும், லாப நோக்கம் கருதி பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போயின. குறிப்பாக, கடைசி ஒரு மணி நேர வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மின்சாரம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், மருந்து உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 204.26 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு, 15,175.08 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 15,448.13 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,136.86 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 5 நிறுவனங்கள் தவிர, 25 நிறுவன பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 68.90 புள்ளிகள் குறைந்து, 4,544.20 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,637.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,531.15
புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|