தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ... பொங்கலுக்காக குவிகிறது பாரம்பரியத்தை நினைவூட்டும் மண் அடுப்பு பொங்கலுக்காக குவிகிறது பாரம்பரியத்தை நினைவூட்டும் மண் அடுப்பு ...
தனியார் முகவர்களுக்கு பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2011
12:00

சென்னை:தமிழகம் முழுவதும், துண்டிக்கப்பட்ட 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவையை திரும்ப வழங்குவதற்கான கட்டணத்தை, தனியார் முகவர்களிடம் இருந்து வசூலிக்க பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.பி.எஸ்.என்.எல்., முகவர்களாகச் செயல்பட்ட தனியார் நிறுவனங்கள் செய்த முறைகேட்டால், தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை துண்டிக்கப்பட்டது குறித்து, கடந்த 24ம் தேதி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, தமிழக மற்றும் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர்களுடன், பி.எஸ்.என்.எல்., விற்பனை மற்றும் வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த உயரதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தில், தனியார் முகவர்களால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், உரிய ஆவணங்களை அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் காண்பித்து, எவ்வித கட்டணமுமின்றி சேவையை புதுப்பித்துக் கொள்ளலாம்.மேலும், தனியார் நிறுவனங்கள் செய்த முறைகேட்டால், பாதிக்கப்பட்ட 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவையை திரும்ப வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இதற்கான கட்டணத் தொகையை, சம்பந்தப்பட்ட தனியார் முகவர்களிடமிருந்தே வசூலிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவடியில் உள்ள, "ஆதர்ஷ் எலக்ட்ரானிக்ஸ்' உட்பட பி.எஸ்.என்.எல்., முகவர்களாகச் செயல்பட்ட, அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை பி.எஸ்.என்.எல்., அனுப்பியுள்ளது.உரிய ஆவணங்கள் வழங்கியும், சேவை துண்டிக்கப்பட்ட ஆவடியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு எவ்வித கட்டணமுமின்றி சேவை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது என பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)