பதிவு செய்த நாள்
27 டிச2011
00:05
- பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -
இறக்குமதியாகும் டயர்களுக்கு, விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு வரியை நீக்க வேண்டும் என, டயர் விற்பனையாளர்கள் மத்திய அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு, கடந்த ஆக., 2ம் தேதி சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் டயர்களுக்கு, பொருள் குவிப்பு வரியை
விதித்தது. இதை நீக்க வேண்டும் என, அகில இந்திய டயர் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு, சுங்கம், உற்பத்தி மற்றும் சேவை வரிகளுக்கான தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. இதையடுத்து, பொருள் குவிப்பு வரியை நீக்குமாறு தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இது குறித்த அரசாணை வெளியிடப்படாததால், வரி விதிப்பு தொடர்வதாகவும், இதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் அகில இந்திய டயர் விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.பி.சிங். வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:இறக்குமதியாகும், டிரக் மற்றும் பஸ்களுக்கான ரேடியல் டயர்களுக்கு, பொருள் குவிப்பு வரி மற்றும் இதர வரிகளாக, 32 முதல் 90 டாலர் வரை வ‹லிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு காலாண்டுகளாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரிதும் சரிவடைந்துள்ளதால், கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர் இறக்குமதிச் செலவினமும் உச்சத்திற்கு உயர்ந்துள்ளது.சென்ற ஏப்ரல் முதல், டயர் விற்பனை நிறுவனங்களின், டயர் இறக்குமதி, 70 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. அதே சமயம், டாலர் மதிப்பு உயர்ந்துள்ளதால், டயர் ஏற்றுமதி, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், உள்நாட்டில், டயர் விலை மிகவும் அதிகரித்துள்ளது. பல்வேறு வாகனங்களுக்கு உரிய டயர்கள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு சிங் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|