ஓரிரு நாளில் உயர்கிறது சி.என்.ஜி., விலைஓரிரு நாளில் உயர்கிறது சி.என்.ஜி., விலை ... "சென்செக்ஸ்' 232 புள்ளிகள் அதிகரிப்பு "சென்செக்ஸ்' 232 புள்ளிகள் அதிகரிப்பு ...
டயர் மீதான பொருள் குவிப்பு வரியை நீக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2011
00:05


- பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -
இறக்குமதியாகும் டயர்களுக்கு, விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு வரியை நீக்க வேண்டும் என, டயர் விற்பனையாளர்கள் மத்திய அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு, கடந்த ஆக., 2ம் தேதி சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் டயர்களுக்கு, பொருள் குவிப்பு வரியை
விதித்தது. இதை நீக்க வேண்டும் என, அகில இந்திய டயர் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு, சுங்கம், உற்பத்தி மற்றும் சேவை வரிகளுக்கான தீர்ப்பாயத்திடம் முறையிட்டது. இதையடுத்து, பொருள் குவிப்பு வரியை நீக்குமாறு தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இது குறித்த அரசாணை வெளியிடப்படாததால், வரி விதிப்பு தொடர்வதாகவும், இதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் அகில இந்திய டயர் விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் எஸ்.பி.சிங். வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:இறக்குமதியாகும், டிரக் மற்றும் பஸ்களுக்கான ரேடியல் டயர்களுக்கு, பொருள் குவிப்பு வரி மற்றும் இதர வரிகளாக, 32 முதல் 90 டாலர் வரை வ‹லிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு காலாண்டுகளாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரிதும் சரிவடைந்துள்ளதால், கார் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர் இறக்குமதிச் செலவினமும் உச்சத்திற்கு உயர்ந்துள்ளது.சென்ற ஏப்ரல் முதல், டயர் விற்பனை நிறுவனங்களின், டயர் இறக்குமதி, 70 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. அதே சமயம், டாலர் மதிப்பு உயர்ந்துள்ளதால், டயர் ஏற்றுமதி, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், உள்நாட்டில், டயர் விலை மிகவும் அதிகரித்துள்ளது. பல்வேறு வாகனங்களுக்கு உரிய டயர்கள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு சிங் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)