பதிவு செய்த நாள்
30 டிச2011
00:39
மும்பை:சென்ற நவம்பர் மாதத்தில், பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வசூல், 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பொது காப்பீட்டு நிறுவனங்கள், சென்ற நவம்பரில், காப்பீட்டு தாரர்களிடம் இருந்து பிரிமியமாக, 4,313 கோடி ரூபாயை வ‹லித்துள்ளன. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், வசூலிக்கப்பட்ட பிரிமியத்தை விட, 29 சதவீதம் (3,345 கோடி ரூபாய்) அதிகமாகும்.
இதே மாதங்களில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமியம் வாயிலான வருவாய், 18.90 சதவீதம் சரிவடைந்து, 4,731 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமியம் வருவாய், 22.3 சதவீதம் குறைந்து, 1,654 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பிரிமியம் வருவாய், 17.5 சதவீதம் சரிவடைந்து, 3,077 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|