பதிவு செய்த நாள்
02 ஜன2012
00:06
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், எல்.ஐ.சி. உள்ளிட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 19 சதவீதம் சரிவடைந்துள்ளது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் காப்பீடு
நாட்டில், 23 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், இந்நிறுவனங்களில், காப்பீடு செய்தவர்களின் எண்ணிக்கை, 2 கோடியே 30 லட்சமாக குறைந்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், காப்பீடு மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையை விட, 12.45 சதவீதம் (2 கோடியே
63 லட்சம்) குறைவாகும்.
இதே காலத்தில், தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களில், பாலிசி எடுத்தவர்களின் எண்ணிக்கை, 32 சதவீதம் சரிவடைந்து, 70 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 47 லட்சமாக குறைந்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனத்தில், பாலிசி எடுத்தவர்களின் எண்ணிக்கை, 5.3 சதவீதம் குறைந்து, 1 கோடியே 93 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 1 கோடியே 83 லட்சமாக குறைந்துள்ளது.
பிரிமிய வருவாய்நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீடு தாரர்களிடம் இருந்து பிரிமியமாக, 62 ஆயிரத்து 430 கோடி ரூபாயை வசூலித்துள்ளன. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், வசூலிக்கப்பட்ட பிரிமியத்தை விட, 18.91 சதவீதம்
(76 ஆயிரத்து 990 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் பிரிமிய வருவாய், 17.57 சதவீதம் சரிவடைந்து, 55 ஆயிரத்து 513 கோடி ரூபாயிலிருந்து, 45 ஆயிரத்து 759 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 22.38 சதவீதம் குறைந்து, 21 ஆயிரத்து 476 கோடி ரூபாயிலிருந்து, 16 ஆயிரத்து 670 கோடி ரூபாயாக Œரிவடைந்துள்ளது.பங்கு வர்த்தகம்
அதிக ஏற்ற, இறக்கத்தில் பங்கு வர்த்தகம், பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால், நடப்பு நிதியாண்டில், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்த காப்பீட்டு நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமானால், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப, ஆறு மாதத்திற்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக் காப்பீடு அதே சமயம், நடப்பு நிதியாண்டில், பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. பொது காப்பீட்டு நிறுவனங்கள், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், காப்பீட்டு தாரர்களிடம் இருந்து பிரிமியமாக, 37 ஆயிரத்து 360 @காடி ரூபாயை வ‹லித்துள்ளன. இது, öŒன்ற ஆண்டின் இதே காலத்தில், வசூலிக்கப்பட்ட பிரிமியத்தை விட, 24 சதவீதம் (30 ஆயிரத்து 47 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 26.7 சதவீதம் அதிகரித்து, 12 ஆயிரத்து 271 கோடி ரூபாயிலிருந்து, 15 ஆயிரத்து 555 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 22.66 சதவீதம் வளர்ச்சி கண்டு, 17 ஆயிரத்து 776 கோடி ரூபாயிலிருந்து,21 ஆயிரத்து 805 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|