கடும் பனியால் பாதிப்பு... இரும்பு கட்டில் விற்பனை மந்தம்கடும் பனியால் பாதிப்பு... இரும்பு கட்டில் விற்பனை மந்தம் ... இரும்புத் தாது ஏற்றுமதி 4 கோடி டன்னாக குறைவு இரும்புத் தாது ஏற்றுமதி 4 கோடி டன்னாக குறைவு ...
ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் ஆயுள் காப்பீட்டு பிரிமிய வருவாய் 19 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2012
00:06

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், எல்.ஐ.சி. உள்ளிட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 19 சதவீதம் சரிவடைந்துள்ளது என, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் காப்பீடு
நாட்டில், 23 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், இந்நிறுவனங்களில், காப்பீடு செய்தவர்களின் எண்ணிக்கை, 2 கோடியே 30 லட்சமாக குறைந்துள்ளது.
இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், காப்பீடு மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையை விட, 12.45 சதவீதம் (2 கோடியே
63 லட்சம்) குறைவாகும்.
இதே காலத்தில், தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களில், பாலிசி எடுத்தவர்களின் எண்ணிக்கை, 32 சதவீதம் சரிவடைந்து, 70 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 47 லட்சமாக குறைந்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி., நிறுவனத்தில், பாலிசி எடுத்தவர்களின் எண்ணிக்கை, 5.3 சதவீதம் குறைந்து, 1 கோடியே 93 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 1 கோடியே 83 லட்சமாக குறைந்துள்ளது.
பிரிமிய வருவாய்நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீடு தாரர்களிடம் இருந்து பிரிமியமாக, 62 ஆயிரத்து 430 கோடி ரூபாயை வசூலித்துள்ளன. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், வசூலிக்கப்பட்ட பிரிமியத்தை விட, 18.91 சதவீதம்
(76 ஆயிரத்து 990 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் பிரிமிய வருவாய், 17.57 சதவீதம் சரிவடைந்து, 55 ஆயிரத்து 513 கோடி ரூபாயிலிருந்து, 45 ஆயிரத்து 759 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 22.38 சதவீதம் குறைந்து, 21 ஆயிரத்து 476 கோடி ரூபாயிலிருந்து, 16 ஆயிரத்து 670 கோடி ரூபாயாக Œரிவடைந்துள்ளது.பங்கு வர்த்தகம்
அதிக ஏற்ற, இறக்கத்தில் பங்கு வர்த்தகம், பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால், நடப்பு நிதியாண்டில், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்த காப்பீட்டு நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமானால், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப, ஆறு மாதத்திற்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக் காப்பீடு அதே சமயம், நடப்பு நிதியாண்டில், பொது காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. பொது காப்பீட்டு நிறுவனங்கள், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், காப்பீட்டு தாரர்களிடம் இருந்து பிரிமியமாக, 37 ஆயிரத்து 360 @காடி ரூபாயை வ‹லித்துள்ளன. இது, öŒன்ற ஆண்டின் இதே காலத்தில், வசூலிக்கப்பட்ட பிரிமியத்தை விட, 24 சதவீதம் (30 ஆயிரத்து 47 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 26.7 சதவீதம் அதிகரித்து, 12 ஆயிரத்து 271 கோடி ரூபாயிலிருந்து, 15 ஆயிரத்து 555 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 22.66 சதவீதம் வளர்ச்சி கண்டு, 17 ஆயிரத்து 776 கோடி ரூபாயிலிருந்து,21 ஆயிரத்து 805 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)