தங்கம் விலை சவரனுக்கு ரூ. 152 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ. 152 உயர்வு ... தமிழகத்தில் 9 இடங்களில் கோவில் - திருப்பதி தேவஸ்தானம் தமிழகத்தில் 9 இடங்களில் கோவில் - திருப்பதி தேவஸ்தானம் ...
சேவை வரி கணக்கு தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2012
14:28

சென்னை : சேவை வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான இரு காலாண்டுகளுக்கு, சேவை வரி கணக்கை, கடந்த மாதம் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இக்காலக்கெடு, வரும் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை, சேவை வரி அலுவலக கமிஷனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த அக்., 1ம் தேதி முதல், சேவை வரி கணக்கை, 'ஆன்-லைனில்' தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரி கணக்கு தாக்கல் செய்வோர், தங்களுக்கான பயனர் குறியீடு, 'பாஸ்வேர்டு' ஆகியவற்றை பயன்படுத்தி, http://www.aces.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சிவகாசி, நாகர்கோவில், ஓசூர் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களில் உள்ள உதவி மையங்களையும், வரி செலுத்துவோர் நாடலாம். இம்மையங்கள் குறித்த தகவல்களை, துறை இணையதளத்தில் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)