பதிவு செய்த நாள்
06 ஜன2012
00:37
புதுடில்லி:அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களில், முதலீடு முதல் முதிர்ச்சி காலம் வரை நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் தொடரும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், பொது சேம நல நிதியத்திற்கான வட்டி விகிதம் மட்டும், ஆண்டுக்கொரு முறை நிர்ணயிக்கும் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கடன் பத்திரங்கள் அடிப்படையில், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு, சந்தை சார்ந்த வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இது, குறித்து முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ள ஐயங்களை போக்கும் வகையில், மத்திய நிதியமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில், முதலீடு செய்யும் காலத்தில் நிலவும் வட்டி விகிதம், முதிர்ச்சி காலம் வரையில் மாற்றமின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரத்திற்கேற்ப வட்டி விகிதம் மாறுபடும்போது, அச்சமயம் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு மட்டுமே அந்த வட்டி விகிதம் பொருந்தும். இந்த நடைமுறை, ஆண்டுக்கொரு முறை வட்டி நிர்ணயம் செய்யப்படும், பொது சேமநல நிதி முதலீடுகளுக்கு பொருந்தாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒரு வங்கியின் வாடிக்கையாளர், தமது சேமிப்பு கணக்கு எண்ணை மாற்றாமல், மற்றொரு வங்கிக்கு கணக்கை மாற்றிக் கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதனால், ஒரு வங்கியின் சேவையில் அதிருப்தி அடைந்து, வேறொரு வங்கிக்கு மாறும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கிக்கு மீண்டும் உரிய சான்றுகளை அளிக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|