வரத்து அதிகரிப்பால் மக்காச்சோளம் விலை வீழ்ச்சிவரத்து அதிகரிப்பால் மக்காச்சோளம் விலை வீழ்ச்சி ... புண்ணாக்கு ஏற்றுமதி 38 லட்சம் டன் புண்ணாக்கு ஏற்றுமதி 38 லட்சம் டன் ...
சிறு சேமிப்பு வட்டியில் மாற்றமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2012
00:37

புதுடில்லி:அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களில், முதலீடு முதல் முதிர்ச்சி காலம் வரை நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் தொடரும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், பொது சேம நல நிதியத்திற்கான வட்டி விகிதம் மட்டும், ஆண்டுக்கொரு முறை நிர்ணயிக்கும் நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கடன் பத்திரங்கள் அடிப்படையில், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு, சந்தை சார்ந்த வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது. இது, குறித்து முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ள ஐயங்களை போக்கும் வகையில், மத்திய நிதியமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில், முதலீடு செய்யும் காலத்தில் நிலவும் வட்டி விகிதம், முதிர்ச்சி காலம் வரையில் மாற்றமின்றி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரத்திற்கேற்ப வட்டி விகிதம் மாறுபடும்போது, அச்சமயம் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு மட்டுமே அந்த வட்டி விகிதம் பொருந்தும். இந்த நடைமுறை, ஆண்டுக்கொரு முறை வட்டி நிர்ணயம் செய்யப்படும், பொது சேமநல நிதி முதலீடுகளுக்கு பொருந்தாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒரு வங்கியின் வாடிக்கையாளர், தமது சேமிப்பு கணக்கு எண்ணை மாற்றாமல், மற்றொரு வங்கிக்கு கணக்கை மாற்றிக் கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதனால், ஒரு வங்கியின் சேவையில் அதிருப்தி அடைந்து, வேறொரு வங்கிக்கு மாறும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கிக்கு மீண்டும் உரிய சான்றுகளை அளிக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)