பதிவு செய்த நாள்
07 ஜன2012
00:40
மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 'எர்டிகா' என்ற பன்முக பயன்பாட்டு காரை (எம்.பி.வி) புதுடில்லியில் நேற்று அறிமுகம் செய்தது.இப்புதிய காரை மாருதி நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஷின்ஜோ நாகநிஷி அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:மாருதி நிறுவனத்தின், இப்புதிய 'எர்டிகா' சிறிய கார் பிரிவில், பன்முக பயன்பாட்டு வாகனமாகத் திகழும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களில், இக்கார் கூடிய விரைவில் விற்பனைக்கு விடப்படும். ஏழு பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இக்காரில் பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன.
சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில், குறைந்த எரிபொருளில் அதிக தூரம் செல்லக்கூடிய வகையில் இக்கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் பின்புறம் பொருள்களை வைப்பதற்கு போதிய இடவசதி, பயணிப்பவர்கள் சொகுசாக பயணிக்கும் வகையில் இடவசதி, குளிர்சாதனம் மற்றும் ஆடியோ சிஸ்டம் போன்றவையும் உள்ளன.இந்திய சாலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள 'எர்டிகா' டீசல் கார் ஒரு லிட்டருக்கு, 16.02 கி.மீ செல்லக்கூடியது.
அதிக ஒளி தரக்கூடிய முகப்பு விளக்குகள் மற்றும் ஓட்டுநரின் விருப்பத்திற்கு ஏற்ப 'ஸ்டியரிங்கை' மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இக்காரில் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு நாகநிஷி கூறினார்.'எர்டிகா' கார் நடப்பு ஆண்டு, மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக, சிறிய வகை கார்கள் பிரிவில், பன்முக பயன்பாட்டு வாகனமாக இருக்கும்.' எர்டிகா' காரின் விலை பின்பு அறிவிக்கப்படும் என இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|