பதிவு செய்த நாள்
09 ஜன2012
16:08
புதுடில்லி: உலக பொருளாதார மந்த நிலையிலும், வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படவில்லை என வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பணி ஒப்பந்த கால முடிவில், ஒன்று முதல் இரண்டு லட்சம் வரையிலான இந்தியர்கள் நாடு திரும்புவது வழக்கம். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை என வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார். பணிகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் குறைந்த திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆறிலிருந்து 8 லட்சம் வரை என கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 6.10 லட்சமாக உள்ளது. உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களை சேர்ந்தவர்களே தற்போது வளைகுடா நாடுகளுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|