எண்ணெய் நிறுவனங்களுக்குரூ.34,000 கோடி இழப்புஎண்ணெய் நிறுவனங்களுக்குரூ.34,000 கோடி இழப்பு ... ரூபாய் 20 ஆயிரம் கோடியில் நகர்ப்புற வாழ்வாதார திட்டம் : உருவாக்குகிறது மத்திய அரசு ரூபாய் 20 ஆயிரம் கோடியில் நகர்ப்புற வாழ்வாதார திட்டம் : உருவாக்குகிறது ... ...
நடப்பு 2011-12ம் நிதியாண்டில்ஏலக்காய் ஏற்றுமதி புதிய சாதனை அளவை எட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2012
00:14

கொச்சி: சர்வதேச அளவில், இந்திய ஏலக்காய்க்கு தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏலக்காய் ஏற்றுமதி புதிய சாதனை அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கவுதமாலா
கடந்த 2009-10ம் நிதியாண்டில், நாட்டின் ஏலக்காய் ஏற்றுமதி 1,975 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், கவுதமாலாவின் ஏலக்காய் ஏற்றுமதி அதிகரித்ததையடுத்தும், உள் நாட்டில், இதற்கான தேவை உயர்ந்ததையடுத்தும், அதற்கு அடுத்த 2010-11ம் நிதி ஆண்டில், இதன் ஏற்றுமதி 1,175 டன்னாக குறைந்து போனது.
நடப்பு 2011-12ம் நிதியாண்டில், டிசம்பர் வரையிலுமாக, நாட்டின் ஏலக்காய் ஏற்றுமதி, 2,500 டன்னை தாண்டியிருக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்தனர். எனவே, மீதமுள்ள மாதங்களில், கூடுதலாக, 500-1,000 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது.
முல்லைப் பெரியாறு
ஏற்றுமதி அதிகரித்துள்ள அதே நேரத்தில், இதன் விலை குறைந்து வருவது விவசாயிகளை பாதிப்பதாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ ஏலக்காய் விலை, 500 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு பிரச்னையால்,ஒரு கிலோ ஏலக்காயின் விலை 350 ரூபாயாக சரிவடைந்தது. விவசாயிகளை பொறுத்தவரை, ஒரு கிலோ ஏலக்காய் 800 ரூபாய் என்ற அளவில் இருந்தால்தான் அது லாபகரமானதாக இருக்கும்.
ஆனால், உள்நாடு மற்றும் வெளி நாடுகளில், ஏலக்காய்க்கான தேவை சிறப்பாக உள்ள நிலையில், இதன் விலை குறைந்துள்ளது என்பது விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இடர்பாடு அளிப்பதாக உள்ளது என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பருக்கு முன்பாக, உள்நாட்டில், ஒரு கிலோ ஏலக்காய் விலை 1,700 ரூபாய் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்ததக்கது.
அதிக வரவேற்பு
இந்திய ஏலக்காயுடன் ஒப்பிடும் போது கவுதமாலா ஏலக்காயின் தரம் குறைவாக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கு அதிக வரவேற்பு உள்ளது என மும்பையில் உள்ள முன்னணி ஏற்றுமதி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட ஏல வர்த்தகத்தில், இதன் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடும் போது, ஏற்றுமதிக்கான இந்திய ஏலக்காயின் விலை குறைவாக உள்ளது.
மிகவும் தரமான ஏலக்காய் குறைந்த விலையில் கிடைப்பதால், போட்டிகளை எதிர்கொண்டு இதன் ஏற்றுமதியை அதிகரிக்க முடிகிறது என கேரள ஏலக்காய் பதப்படுத்தும் மற்றும் சந்தைப்படுத்தும் கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் பி.சி.புனூஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், சந்தையில் ஏலக்காய் வரத்து அதிகரித்துள்ளதால், இதன் விலை மேலும் அதிகரிக்காமல் நிலையான அளவில் உள்ளது.
சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 டன் என்ற அளவில் ஏலக்காய் வந்து கொண்டுள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது, இரண்டு மடங்கு அதிகமாகும். அதிகளவில் ஏலக்காய் உற்பத்தியாகும் கேரள பகுதிகளில் சாதகமான பருவ நிலை நிலவுவதால், இதன் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கையிருப்பு
கடந்த ஆண்டை விட ஏலக்காய்க்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் கையிருப்பில் உள்ள ஏலக்காயையும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலுமான ஒன்பது மாத காலத்தில், ஏல சந்தைகளுக்கு 13 ஆயிரத்து 746 டன் ஏலக்காய் வந்துள்ளது.
அதேசமயம், இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், ஏலக்காய் வரத்து 7,230 டன் என்ற அளவில் தான் இருந்தது.
உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை உயர்வு போன்றவற்றால், பருவம் முடிவதற்கு முன்பாகவே, ஏலக்காய் ஏற்றுமதி சிறப்பான அளவில் இருக்கும்மென வர்த்தகர்கள் மேலும் கூறினர்.



Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)