பதிவு செய்த நாள்
11 ஜன2012
00:07
மும்பை: சர்வதேச அளவில் அலுமினியம் விலை உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டில் அலுமினியம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் லாபம் குறையும் என கேர் நிறுவனம் கணித்துள்ளது.மூலப் பொருள்கள், மின்சாரம், நிலக்கரி ஆகியவற்றின் விலை உயர்வால், அலுமினியம் உற்பத்தி நிறுவனங்களின் லாப வரம்பு, சென்ற டிசம்பருடன் முடிந்த மூன்றாம் காலாண்டில் சரியும் என தெரிகிறது.கடந்த 2006-07ம் நிதியாண்டில் உயர்ந்திருந்த இந்நிறுவனங்களின் லாப வரம்பு, பின்னர் 2009-10ம் நிதியாண்டு வரை குறைந்திருந்தது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், சர்வதேச சந்தையில் அலுமினியம் விலை உயர்ந்ததால், உள் நாட்டு நிறுவனங்களின் லாப வரம்பும் அதிகரித்தது.அலுமினியம் பயன்பாடு கடந்த 2001-06 வரையிலான நிதியாண்டுகளில், ஆண்டுக்கு 15 சதவீத சராசரி வளர்ச்சியைக் கண்டு வந்தது. அதே சமயம், இதே காலத்தில், அலுமினியம் பயன்பாட்டின், ஒட்டு மொத்த சராசரி வளர்ச்சி 9.3 சதவீதமாக குறைந்து காணப்பட்டது. இதற்கு, 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலைதான் காரணம் என கேர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2001-2011 வரையிலான 10 நிதியாண்டுகளில், அலுமினியத் துறையின் உற்பத்தி திறன், ஆண்டுக்கணக்கில் சராசரியாக 13 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டது. இதே காலத்தில், உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 11 சதவீதமாக உயர்ந்தது. நடப்பு 2011-12ம் நிதியாண்டு முதல் வரும் 2015-16ம் நிதியாண்டு வரை உள்நாட்டின் அலுமினியத்திற்கான தேவை, ஆண்டுக்கணக்கில், சராசரியாக 8.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும். வரும் 2015-16ம் நிதியாண்டில், அலுமினியத்திற்கான தேவை 24 லட்சம் டன்னை எட்டும்.இந்த தேவைக்கு, மின்சாரம், வாகனம் மற்றும் கட்டுமானத் துறைகள் முக்கிய பங்களிப்பை வழங்கும். நாட்டின் மொத்த அலுமினியத் தேவையில், இத் துறைகளின் பங்கு 50 சதவீதமாகும். அடுத்த இடங்களில் பேக்கேஜிங், நுகர்வோர் சாதனங்கள் துறைகள் உள்ளன.
நடப்பாண்டில் ஒரு டன் அலுமினியம் விலை 2,400-2,500 ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|