பதிவு செய்த நாள்
13 ஜன2012
00:29
புதுடில்லி:ஏற்றுமதி வரி உயர்வால், இரும்புத் தாதுவின் விலை 20-40 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச சந்தையில் ஒரு டன் இரும்புத் தாது, 50 டாலர் வரை குறைந்துள்ளது. அதே சமயம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, 22 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு, இரும்புத் தாது மீதான ஏற்றுமதி வரியை, 30 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இத்தகைய காரணங்களால், உள்நாட்டில் இரும்புத்தாது விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு டன் "எப்.இ' ரக இரும்புத் தாது விலை, 62.5 சதவீதம் குறைந்து 3.300 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக குறையும் என, ஜே.எஸ்.டபிள்யு நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சேஷகிரி ராவ் தெரிவித்தார்.சர்வதேச சந்தையில், ஒரு டன் இரும்புத் தாது 110-135 டாலராக உள்ளது. இது, உள்நாட்டில், 67 டாலர் என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|