பதிவு செய்த நாள்
17 ஜன2012
00:07
புதுடில்லி: சென்ற ஏப்ரல் முதல், டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்திய ரயில்வே கையாண்ட சரக்குகளின் மதிப்பு, 49 ஆயிரத்து, 209 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய 2010ம் ஆண்டின் இதே காலத்தில் ஈட்டிய வருவாயை விட, 4.59 சதவீதம் (44 ஆயிரத்து 789 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலத்தில், ரயில்வே கையாண்ட சரக்குகளின் அளவு, 4.68 சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.33 கோடி டன்னிலிருந்து, 70.48 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும், சரக்கு போக்குவரத்து வாயிலாக ஈட்டிய மொத்த வருவாய், 6,102 கோடி ரூபாயாக உள்ளது. இதில், 4.10 கோடி டன் நிலக்கரி கையாண்டதன் மூலம் கிடைத்த, 2,549 கோடி ரூபாயும் அடங்கும். இதையடுத்து, <<உருக்கு மற்றும் இதர துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, 89 லட்சம் டன் இரும்புத் தாது எடுத்துச் செல்லப்பட்டதில், 544 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இது தவிர, சிமென்ட் ( 94 லட்சம் டன் = 563 கோடி ரூபாய்), உணவு தானியங்கள் (39 லட்சம் டன்=404 கோடி ரூபாய்), பெட்ரோலியப் பொருட்கள், மசகு எண்ணெய் (35 லட்சம் டன் = 329 கோடி ரூபாய்) ஆகியவையும், ரயில்வே சரக்கு வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|