பதிவு செய்த நாள்
18 ஜன2012
11:45
திண்டுக்கல் : பூண்டு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், குழுக்கள் அமைக்க வேளாண் விற்பனை வணிக துறை முடிவு செய்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியான வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி கிராமங்களில் 650 எக்டேர் பரப்பில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. பூண்டு பயிர் ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர் ஆகிய இரு பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் 3300 டன் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
பூண்டு பயிர் சாகுபடியில் 3000 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பூண்டு பயிருக்கு கொடைக்கானலில் சந்தை வசதியில்லை. இதனால் தேனி மாவட்டம் வடுகபட்டியில் இயங்கும் பூண்டு சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கு கமிஷன் கடைக்காரர்கள் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எடை அளவுகளிலும் வித்தியாசம் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மாவட்ட வேளாண் விற்பனை வணிகத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பூண்டு விவசாயிகள், 15 முதல் 20 பேர் கொண்ட குழு அமைத்து, பூண்டு பதப்படுத்தும் வணிக நிறுவனங்களிடம் ஒப்பந்த பண்ணையம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, வத்தலக்குண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ஊரக வணிக மையம் அமைய உள்ளது.
இங்கு வணிக நிறுவனங்கள் மூலம் பூண்டு கொள்முதல் செய்யப்படும். இந்த மையத்தில் இடைத்தரகர் இல்லாததால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். கொடைக்கானல் பகுதி பூண்டு விவசாயிகள் தங்களது பகுதிகளில் குழுக்கள் அமைத்து பயன்பெறலாம், என, வேளாண்மை விற்பனை வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|