சென்ற ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில்...நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1,35,216 கோடிசென்ற ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில்...நவரத்தினங்கள், ஆபரணங்கள் ... ... பூண்டு சாகுபடியில் உரிய விலை : வத்தலக்குண்டில் வணிக மையம் பூண்டு சாகுபடியில் உரிய விலை : வத்தலக்குண்டில் வணிக மையம் ...
வணிகவரித் துறையை கணினிமயமாக்க ரூ.230 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2012
10:05

சென்னை: வணிகவரித் துறையை கணினிமயமாக்க, 230.96 கோடி ரூபாய் செலவிலான திட்டத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், வரி ஏய்ப்பு தடுக்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் செய்திக் குறிப்பு: மாநிலத்தின் மொத்த வருவாயில், மூன்றில் இரண்டு பங்கை, வணிகவரித் துறை ஈட்டித் தருகிறது. இங்கு, அடிப்படைப் பணிகள் மட்டுமே, கணினி மயமாக்கப்பட்டுள்ளன. தற்போது, பெருகி வரும் வணிக பரிமாற்றங்களுக்கு ஏற்ப, துறையின் செயலாக்கத் திறனை அதிகரிக்க, அனைத்து பணிகளையும் கணினி மயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோர், தங்களுக்கு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக, அனைத்து நாட்களிலும், 24 மணி நேரம் செயல்படக் கூடிய உதவி மையம் அமைக்கப்படும். இதனால், வணிகர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இடையேயான நேரடித் தொடர்பு, வெகுவாக குறைவதுடன்; துல்லியமான தகவல் பெறப்பட்டு, வரிவசூல் அதிகரிப்பதற்கும், வரி ஏய்ப்பை தடுக்க உரிய நடவடிக்கைகளை, துரிதமாக எடுக்கவும் இயலும். இத்திட்டத்தை, 230.96 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில், 93.40 கோடி ரூபாய், மூலதன செலவாகவும், மீதமுள்ள தொகை, ஐந்து ஆண்டுகளுக்குள் தொடர் செலவினமாகவும் மேற்கொள்ளப்படும். இந்த முன்னோடித் திட்டத்தை, 14 மாதத்துக்குள் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)