சிமெண்டு விலை உயரும் வாய்ப்புசிமெண்டு விலை உயரும் வாய்ப்பு ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாமக்கல்லில் குவியும் தர்ப்பூசணி பழம்: கிலோ ரூ.20க்கு விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
10:24

நாமக்கல்: நாமக்கல்லில், திண்டிவனம் தர்ப்பூசணிப் பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சீஸன் துவக்கம் என்பதால், அவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். கோடை வெப்பத்தின் தாக்கம் மார்ச் மாதம் துவங்கி, ஜூன் மாதம் இறுதி வரை நீடிக்கும். கோடை வெப்பத்தை சமாளிக்க, பழரசம், தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை மக்கள் அதிகளவு நாடுவது வழக்கம். இந்தாண்டு கோடை காலம் துவங்க ஒரு மாத காலம் உள்ளது. இந்நிலையில், தற்போதே கோடை வெப்பத்தை சமாளிக்கக் கூடிய தர்ப்பூசணிப் பழங்கள், நாமக்கல் பகுதியில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு வருகின்றன. திண்டிவனத்தில் விளைவிக்கப்படும் தர்ப்பூசணிப் பழங்கள், லாரிகள் மூலம் மொத்த விலைக்கு வாங்கி வரும் வியாபாரிகள், அவற்றை நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் சில்லறை விலையில் விற்பனை செய்கின்றனர்.
ஒரு கிலோ தர்ப்பூசணி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சீஸன் துவக்கம் என்பதால், விலை சற்று அதிகமாக உள்ளது. வரும் வாரங்களில், பழத்தின் வரத்து அதிகரிக்கும். அச்சமயத்தில், பழத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தர்ப்பூசணி வியாபாரிகள் கூறியதாவது:
திண்டிவனத்தில், தர்ப்பூசணி அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. அங்கு விளைவிக்கப்படும் பழங்கள் சுவை மிகுந்திருக்கும் என்பதால், அவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். அங்கிருந்து, தமிழகம் முழுவதும் தர்ப்பூசணி விற்பனைக்கு செல்கிறது. சீஸன் துவக்கம் என்பதால், பழத்தின் வரத்து குறைவாக உள்ளது.
வரும் வாரங்களில் பழங்களின் வரத்து அதிகரிக்கும். குளிர் சீஸன் என்பதையும் மக்கள் பொருட்படுத்தாமல், தர்ப்பூசணிகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு கூறினர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)