பனிப்பொழிவால் பூ விலை கடும் உயர்வு: மல்லிகை கிலோ 1,700 ரூபாய்பனிப்பொழிவால் பூ விலை கடும் உயர்வு: மல்லிகை கிலோ 1,700 ரூபாய் ... கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்: ரூ.1 கோடிக்கு ஜெர்மன் ஆர்டர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்: ரூ.1 கோடிக்கு ஜெர்மன் ஆர்டர் ...
வீட்டுக் கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை எஸ்.பீ.ஐ., குறைத்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2012
00:06

புதுடில்லி: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பீ.ஐ.,), வீட்டு வசதிக் கடனுக்கான பரிசீலனை கட்டணத்தை குறைத்துள்ளது.இதன்படி, 75 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட வீட்டு வசதிக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணம், 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.அதுபோன்று, 30 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட 75 லட்ச ரூபாய் வரையிலான வீட்டு வசதிக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணம், 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.அதே சமயம், 30 லட்ச ரூபாய் வரையிலான வீட்டு வசதிக் கடனுக்கான பரிசீலனை கட்டணம் குறைக்கப்படவில்லை. இத்தொகை, மொத்த கடனில் 0.25 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என வங்கி தெரிவித்துள்ளது.வீட்டுவசதிக் கடன் வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில், இவ்வங்கி, பரிசீலனைக் கட்டணத்தை குறைத்துள்ளது. தனியார் துறையை சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகியவை, வீட்டு வசதிக் கடன் தொகையில் 0.5 சதவீத அளவிற்கு பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கின்றன.வீட்டு வசதிக் கடனுக்கு, பேங்க் ஆப் பரோடா 0.4 சதவீதம் பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கிறது. இவ்வங்கியின் அதிகபட்ச பரிசீலனைக் கட்டணம் 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. பேங்க் ஆப் இந்தியா, 25 - 75 லட்ச ரூபாய் வரையிலான வீட்டு வசதிக் கடனுக்கு, ஒரே தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறது.நடப்பு 2011-12ம் நிதியாண்டு முடிய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ளன. ரிசர்வ் வங்கி, அதன் பணக்கொள்கை குறித்த அறிக்கையை வெளியிட உள்ளது. அதில், வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றும், குறைக்கப்பட மாட்டாது என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.இந்நிலையில், வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வீட்டு வசதிக் கடனுக்கான பரிசீலனைக் கட்டணத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.வீட்டு வசதிக் கடனை முன்னதாகவே செலுத்துவோருக்கு விதிக்கப்படும் அபராதத்தை நீக்க வேண்டும் என, கடந்தாண்டு, தேசிய வீட்டு வசதி வங்கி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, எஸ்.பீ.ஐ., பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட சில வங்கிகள், இவ்வகை அபராத விதிப்பதை கைவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)