பதிவு செய்த நாள்
23 ஜன2012
00:07
சென்னை: கீர்த்திலால் காளிதாஸ் ஜுவல்லர்ஸ் நிறுவனம், சென்னையில் உள்ள அதன் ஆழ்வார்பேட்டை ÷ஷாரூமில், புதிய தங்க ஆபரணங்களை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் இயக்குனர் சூரஜ் சாந்தகுமார் கூறியதாவது:இந்தியாவில் பிறந்த ஏ.வி.ஷிண்டே, உலகின் தலைசிறந்த ஆபரண வடிவமைப்பாளராக திகழ்ந்தார். நெக்லஸ், வளையல்கள், தோடுகள் என, இவர் வடிவமைத்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைகளை, 18 காரட் மஞ்சள் மற்றும் வெள்ளை தங்கத்தில் "ஷிண்டே கலெக்ஷன்' என்ற பெயரில் விற்பனை செய்ய உள்ளோம். இதற்காக, 6 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.நிறுவனம், பெல்ஜியத்தில் உள்ள யூரோ ஸ்டார் டைமன்ட் என்ற தாய் நிறுவனத்திடமிருந்து, கச்சா வைரங்களை பெற்று, அவற்றை சிறப்பான முறையில் வடிவமைத்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. நிறுவனத்திற்கு, தமிழகத்தில் நான்கு கிளைகள் உட்பட, நாடு முழுவதும், ஒன்பது கிளைகள் உள்ளன. இவ்வாறு சாந்தகுமார் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|