மொபைல் போன் விற்பனை 16.60 கோடியாக வளர்ச்சிமொபைல் போன் விற்பனை 16.60 கோடியாக வளர்ச்சி ... சாலை வசதிக்கு ரூ.152.78 கோடி ஒதுக்கீடு - ஜெ., சாலை வசதிக்கு ரூ.152.78 கோடி ஒதுக்கீடு - ஜெ., ...
ரூ.400 கோடியில் தரமான மின்சாரம் வழங்கும் திட்டம் : அடுத்த மாதம் அமல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2012
10:26

தமிழகம் முழுவதும், உயர்தர மின்சாரம் வழங்குவது தொடர்பாக, உள்கட்டமைப்புகளை மாற்றி அமைக்கும் மத்திய அரசின் திட்டம், அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. இதற்காக, 400 கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களிலும் மின் வினியோக டிரான்ஸ்பார்மர், கேபிள்களை மாற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி அனைத்து நுகர்வோருக்கும், மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் இல்லாத, தரமான மின் வினியோகம் தரவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டம், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களை நவீனப்படுத்துதல், பழுதடைந்த கேபிள்களை மாற்றுதல், அனைத்து மின் வினியோக துணை மின் நிலையங்களிலும், நவீன உபகரணங்கள் கொண்டு, கணினி மூலம் இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. டெண்டர் அறிவிப்பு மத்திய அரசு உதவியுடன், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "உயர்தர மின் வினியோக சீரமைப்பு திட்டம்' (ஏ.பி.டி.ஆர்.பி.,) அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்ததாரரை முடிவு செய்யும் பணி, வரும் 17ம் தேதி முடிகிறது. சீரான வினியோகம் இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இதன் மூலம், பொதுமக்களுக்கு மின்னழுத்த ஏற்ற இறக்கம் பிரச்னை இல்லாத வகையில், மின் வினியோகம் தர முடியும். இது தவிர, மின் வினியோகத்தால் ஏற்படும் 21 சதவீத இழப்பை, 15 சதவீதமாகக் குறைக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)