பதிவு செய்த நாள்
26 ஜன2012
10:26
தமிழகம் முழுவதும், உயர்தர மின்சாரம் வழங்குவது தொடர்பாக, உள்கட்டமைப்புகளை மாற்றி அமைக்கும் மத்திய அரசின் திட்டம், அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. இதற்காக, 400 கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களிலும் மின் வினியோக டிரான்ஸ்பார்மர், கேபிள்களை மாற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி அனைத்து நுகர்வோருக்கும், மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் இல்லாத, தரமான மின் வினியோகம் தரவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டம், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களை நவீனப்படுத்துதல், பழுதடைந்த கேபிள்களை மாற்றுதல், அனைத்து மின் வினியோக துணை மின் நிலையங்களிலும், நவீன உபகரணங்கள் கொண்டு, கணினி மூலம் இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. டெண்டர் அறிவிப்பு மத்திய அரசு உதவியுடன், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், "உயர்தர மின் வினியோக சீரமைப்பு திட்டம்' (ஏ.பி.டி.ஆர்.பி.,) அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்ததாரரை முடிவு செய்யும் பணி, வரும் 17ம் தேதி முடிகிறது. சீரான வினியோகம் இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இதன் மூலம், பொதுமக்களுக்கு மின்னழுத்த ஏற்ற இறக்கம் பிரச்னை இல்லாத வகையில், மின் வினியோகம் தர முடியும். இது தவிர, மின் வினியோகத்தால் ஏற்படும் 21 சதவீத இழப்பை, 15 சதவீதமாகக் குறைக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|