பதிவு செய்த நாள்
27 ஜன2012
15:12
புதுடில்லி: சர்வதேச அளவில், கடந்த 2010-11 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), 10.45 கோடி மூட்டைகள் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய 2009-10 பருவத்தில் 9.43 கோடி மூட்டைகளாக இருந்தது. ஆக, உலக நாடுகளின் ஏற்றுமதி 11 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.ஒரு மூட்டை என்பது 60 கிலோ காபி கொட்டை கொண்டதாகும். கடந்த பருவத்தில் உலக காபி ஏற்றுமதி புதிய சாதனை அளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச காபி அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி அப்பருவத்தில் சர்வதேச காபி உற்பத்தி 13.42 கோடி மூட்டைகளாக இருந்தது. இது, நடப்பு பருவத்தில் 1.3 சதவீதம் குறைந்து 13.24 கோடி மூட்டைகளாக சரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மோசமான பருவநிலையே காரணமாக இருக்கும் என தெரிகிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், நடப்பு பருவத்திற்கான உலக காபி உற்பத்தி 12.74 கோடி மூட்டைகளாக இருக்கும் என சர்வதேச காபி அமைப்பு மதிப்பீடு செய்தது. எனினும், டிசம்பர் மாதத்தில் வெளியிட்ட மறுமதிப்பீட்டில் உற்பத்தி மேலும் 12 லட்சம் மூட்டைகள் அதிகமாக, அதாவது 12.86 கோடி மூட்டைகளாக உயரும் என தெரிவித்தது. தற்போதைய மதிப்பீடு இதையும் விட அதிகமாக உள்ளது. உலக அளவில் காபி உற்பத்தியில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. நம்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த காபியில் சுமார் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|