பதிவு செய்த நாள்
30 ஜன2012
01:22
புதுடில்லி:நீர்மின் உற்பத்தியில் ஈடுபடும் என்.எச்.பி.சி. நிறுவனம், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 212 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 29 சதவீதம் (301 கோடி ரூபாய்) குறைவு.அதேசமயம், இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 22 சதவீதம் வளர்ச்சியடைந்து, 709 கோடியிலிருந்து, 862 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கான செலவினம் 182 கோடியிலிருந்து, 228 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், இதர வகை செலவினங்களும் இரண்டு மடங்கு அதிகரித்து, 119 கோடியிலிருந்து, 275 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால், இந்நிறுவனத்தின் நிகர லாபம் சரிவடைந்துள்ளது.வரும் 12வது ஐந்தாண்டு (2012-17) திட்ட காலத்தில், இந்நிறுவனத்தின் மின் உற்பத்தி திறன் 15 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது, 4,502 மெகாவாட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|