பதிவு செய்த நாள்
30 ஜன2012
01:24
டாவோஸ்:இவ்வாண்டு இறுதிக்குள் மகிந்திரா சத்யம் - டெக் மகிந்திரா நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. இத்தகவலை, டாவோசில், சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற மகிந்திரா சத்யம் நிறுவன தலைவர் வினீத் நய்யார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இரு நிறுவனங்களின் இணைப்பு பணிகள் விரைவில் துவங்கி, இவ்வாண்டிற்குள் முடிவடையும். மகிந்திரா சத்யம், டெக் மகிந்திராவை இணைத்துக் கொள்ளுமா அல்லது அதனுடன் இணையுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனத்தின் பெயரில் சத்யம் இடம் பெறுமா, இல்லையா என்பது தெரியாது. ஆனால், மகிந்திரா பெயர் இருக்கும். சத்யம் பெயரை விட, மகிந்திரா பெயர் எங்களுக்கு மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் மேலும் கூறினார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜு, பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு காரணமாக 2009ல் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, 2010ம் ஆண்டு, ஏப்ரலில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை, மகிந்திரா குழுமம் கையகப்படுத்தி, மகிந்திரா சத்யம் என்ற பெயரில் நிர்வகித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|