பதிவு செய்த நாள்
31 ஜன2012
01:51
புதுடில்லி:இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம், சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருவதாக, சீனாவிற்கான இந்திய தூதர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கடந்த 2011ம் ஆண்டில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 7,390 கோடி டாலராக (3 லட்சத்து 69 ஆயிரம் 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
இது, கடந்த 2010ம் ஆண்டில், 6,170 கோடி டாலராக (3 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருந்தது.கணக்கீட்டு காலத்தில், இந்தியாவிலிருந்து, சீனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 12.26 சதவீதம் வளர்ச்சிகண்டு, 2,340 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து, சீனாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், மருந்து பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், சீனாவில் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில், இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், இந்தியாவிலிருந்து, சீனாவிற்கான இரும்புத் தாது ஏற்றுமதி மிகவும் குறைந்து போயுள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|