பதிவு செய்த நாள்
04 பிப்2012
00:06
பெங்களூரு: கார்ப்பரேஷன் வங்கி, சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், 402 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 5.2 சதவீதம் (382 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், மொத்த வருவாய், 39.1 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2,736 கோடியிலிருந்து, 3,804 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இவ்வங்கி, 1,155 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தைவிட, 12.08 சதவீதம் (1,068 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே காலத்தில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 42.46 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,414 கோடி ரூபாயிலிருந்து, 10 ஆயிரத்து 562 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, இவ்வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய் குமார் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|