ஏப்ரல் - ஜனவரி வரையிலான 10 மாதங்களில்...நேரடி வரி வசூல் ரூ.4.25 லட்சம் கோடியாக உயர்வுஏப்ரல் - ஜனவரி வரையிலான 10 மாதங்களில்...நேரடி வரி வசூல் ரூ.4.25 லட்சம் கோடியாக ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ...
வரி ஏய்ப்பை தடுக்க வணிக வரித்துறை திட்டம்: ரூ.230 கோடியில் கம்ப்யூட்டர் மயமாக்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2012
10:36

கோவை: வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கத்துடன், வணிக வரித் துறையை, 230 கோடி ரூபாய் செலவில் கம்ப்யூட்டர்மயமாக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, முதல் கட்டமாக, 116 கோடி ரூபாய் நிதியை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. வணிக வரித்துறையில் அடிப்படையான செயல்பாடுகள் மட்டுமே, இப்போது கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளன. இதன், அனைத்து செயல்பாடுகளையும், கம்ப்யூட்டரில் மேற்கொள்வதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.ஐந்தாண்டுகள் செயல்படுத்தும் வகையில், 230 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், துறை செயல்பாடுகளை மறுசீரமைத்தல், பொதுமக்களை சார்ந்ததாக துறை செயல்பாடு இருத்தல், தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துதல் ஆகியவையாகும்.
இந்நிலையில், வரி ஏய்ப்பை தடுக்கவும், வருவாயை பெருக்கவும் தேவையான முடிவுகளை, விரைந்து எடுப்பதற்கு, கம்ப்யூட்டர்மயமாக்கும் பணிகள் உதவிகரமாக இருக்கும்.இது தொடர்பான திட்ட அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, 230 கோடி ரூபாய் செலவிலான திட்டத்துக்கு, நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. மூலதனச் செலவு 93 கோடி ரூபாய், முதலாண்டு செலவு 23 கோடி ரூபாய் என, மொத்தம் 116 கோடியே 69 லட்ச ரூபாயை விடுவிப்பதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளது. கம்ப்யூட்டர் மயமாக்குதலின் முதல் கட்டப் பணி, 14 மாத காலத்தில் முடியும் வகையில் திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)