பதிவு செய்த நாள்
09 பிப்2012
10:36
கோவை: வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கத்துடன், வணிக வரித் துறையை, 230 கோடி ரூபாய் செலவில் கம்ப்யூட்டர்மயமாக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, முதல் கட்டமாக, 116 கோடி ரூபாய் நிதியை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. வணிக வரித்துறையில் அடிப்படையான செயல்பாடுகள் மட்டுமே, இப்போது கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுள்ளன. இதன், அனைத்து செயல்பாடுகளையும், கம்ப்யூட்டரில் மேற்கொள்வதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.ஐந்தாண்டுகள் செயல்படுத்தும் வகையில், 230 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், துறை செயல்பாடுகளை மறுசீரமைத்தல், பொதுமக்களை சார்ந்ததாக துறை செயல்பாடு இருத்தல், தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துதல் ஆகியவையாகும்.
இந்நிலையில், வரி ஏய்ப்பை தடுக்கவும், வருவாயை பெருக்கவும் தேவையான முடிவுகளை, விரைந்து எடுப்பதற்கு, கம்ப்யூட்டர்மயமாக்கும் பணிகள் உதவிகரமாக இருக்கும்.இது தொடர்பான திட்ட அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, 230 கோடி ரூபாய் செலவிலான திட்டத்துக்கு, நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. மூலதனச் செலவு 93 கோடி ரூபாய், முதலாண்டு செலவு 23 கோடி ரூபாய் என, மொத்தம் 116 கோடியே 69 லட்ச ரூபாயை விடுவிப்பதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளது. கம்ப்யூட்டர் மயமாக்குதலின் முதல் கட்டப் பணி, 14 மாத காலத்தில் முடியும் வகையில் திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|