தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ... நாட்டின் ஜவுளி துறை வர்த்தகம் ரூ.5.75 லட்சம் கோடியை தாண்டும் நாட்டின் ஜவுளி துறை வர்த்தகம் ரூ.5.75 லட்சம் கோடியை தாண்டும் ...
முக்கிய பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2012
00:07

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் முக்கிய பொருட்கள் இறக்குமதி, 67 ஆயிரத்து 264 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 42.3 சதவீதம் (47 ஆயிரத்து 260 கோடி ரூபாய்) அதிகமாகும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.பால் மற்றும் பால் பொருட்கள், சமையல் எண்ணெய், உணவு தானியங்கள், பழம், காய்கறிகள் போன்றவை முக்கிய பொருட்கள் பிரிவின் கீழ் வருகின்றன. நாட்டின் மொத்த இறக்குமதியில், இவற்றின் பங்களிப்பு, 4.7 சதவீதம் என்றளவில் உள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சமையல் எண்ணெய் இறக்குமதி, 18 ஆயிரத்து 890 கோடியிலிருந்து, 31 ஆயிரத்து 66 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி முறையே, 64.6 சதவீதம் மற்றும் 63.7 சதவீதம் அதிகரித்துள்ளது.நாட்டின் முக்கிய பொருட்கள் இறக்குமதியில், இந்தோனேஷியா, சீனா, மலேசியா, அர்ஜென்டினா, ஜெர்மனி, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, கனடா, மியான்மர், ஜப்பான், தாய்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது.அதேசமயம், பிரேசில், ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து குறைந்தளவிலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.ஆனால், மத்திய அரசின் வருவாய் குறைந்துள்ள நிலையில், நிலைக்குழுவின் பரிந்துரைகளை நிதியமைச்சகம் எந்த அளவிற்கு ஏற்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)