பதிவு செய்த நாள்
14 பிப்2012
01:43
புதுடில்லி:நாட்டின் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற ஜனவரி மாதத்தில், 24 சதவீதம் அதிகரித்துள்ளது என, கைவினை பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.இந்தியாவில், 10 லட்சத்துக்கும் அதிமானோர் கைவினை பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலுக்கு மொரதாபாத், ஜெய்ப்பூர், ஷரன்பூர், ஜோத்பூர் ஆகிய நகரங்கள் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.உலகின் பல நாடுகளுக்கு, இந்திய கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் பங்களிப்பு, 70 சதவீதம் என்றளவில் உள்ளது.நடப்பாண்டு, ஜனவரி மாதத்தில், கைவினை பொருட்கள் ஏற்றுமதி, 17.80 கோடி டாலராக (890 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 24 சதவீதம் (14.30 கோடி டாலர் - 715 கோடி ரூபாய்) அதிகம்.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 270 கோடி டாலர் (13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, கைவினை பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 230 கோடி டாலரை (11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) தாண்டியது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி, 180 கோடி டாலராக (9,000 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 19 சதவீதம் (150 கோடி டாலர்-7,500 கோடி ரூபாய்) அதிகம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|