பதிவு செய்த நாள்
16 பிப்2012
02:51
புதுடில்லி:இந்தியாவில், சென்ற 2011ம் ஆண்டின், நான்காவது காலாண்டில், கம்ப்யூட்டர் மற்றும் லேப்-டாப் விற்பனை 25 லட்சமாக உள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 6.5 சதவீதம் குறைவாகும் என, கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில், தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், ஹார்டு டிஸ்க் டிரைவ் உற்பத்தி வெகுவாக பாதித்து பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக, நான்காவது காலாண்டில் கம்ப்யூட்டர்கள் விற்பனை, 18 சதவீதம் சரிவடைந்துள்ளது என கார்ட்னர் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் விஷால் திரிபாதி தெரிவித்தார்.
கணக்கீட்டு காலத்தில், டெல் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை 11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 15.5 சதவீதமாக உள்ளது. லெனோவா நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, 28 சதவீதம் அதிகரித்ததையடுத்து, இதன் சந்தை பங்களிப்பு, 9.6 சதவீதத்திலிருந்து, 13.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தவிர, ஏசர் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 12.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், எச்.பி. நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 12.4 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
மொத்த கம்ப்யூட்டர் விற்பனையில், பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதாவது, ஏசர், டெல், எச்.பி., மற்றும் லெனோவா ஆகிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர் விற்பனை 53.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உள்நாட்டைச் சேர்ந்த எச்.சி.எல்., நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, 34 சதவீதத்திலிருந்து, 5.5 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதே சமயம், சென்ற ஆண்டின், நான்காவது காலாண்டில், லேப்-டாப் கம்ப்யூட்டர் விற்பனை, முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 12 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|