பதிவு செய்த நாள்
17 பிப்2012
00:05
புதுடில்லி: வரும், 2015ல், உள்நாட்டில், காலணிகள் துறையின் சந்தை மதிப்பு, 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது, 22 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.உயர்தர காலணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், நாட்டின் சிறிய, நடுத்தர நகரங்களை மையமாக வைத்து, விற்பனையில் ஈடுபட்டுள்ளன. நாட்டில், விற்பனையாகும் மொத்த காலணிகளில், இந்நகரங்களின் பங்களிப்பு, 55 சதவீதம் என்றளவில் உள்ளது.மொத்த காலணிகள் சந்தையில், ஆடவர்களுக்கான பிரிவு, 55 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது. இவை தவிர, குழந்தைகள் மற்றும் மகளிருக்கான சந்தை பங்களிப்பு முறையே, 15 மற்றும் 30 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இந்தியாவில், காலணிகள் தயாரிப்பில், அமைப்பு சாராத நிறுவனங்களின் பங்களிப்பு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இவற்றில், 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அமைப்பு சார்ந்த நிறுவனங்கள், எஞ்சிய 30 சதவீதம் (5 லட்சம் வேலைவாய்ப்பு) பங்களிப்பை கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|