நேரடி வரி மசோதா அறிக்கை நிலைக் குழு இன்று ஆய்வு நேரடி வரி மசோதா அறிக்கை நிலைக் குழு இன்று ஆய்வு ... நடப்பு நான்காவது காலாண்டில்... நாட்டின் தங்கம் இறக்குமதி220 டன்னாக குறையும் நடப்பு நான்காவது காலாண்டில்... நாட்டின் தங்கம் இறக்குமதி220 டன்னாக குறையும் ...
பொருளாதார மந்த நிலையால் உருக்கு பயன்பாட்டு வளர்ச்சியில்சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2012
00:08

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில் உருக்கு பயன்பாடு குறையும் என தனியார் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், இத்துறை 9.9 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் பணவீக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால், அடிப்படை கட்டமைப்பு துறை நிறுவனங்களும், மோட்டார் வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனால், இத்துறை நிறுவனங்களின் உருக்கு பயன்பாடு குறைந்து போனது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 6.9 சதவீதம் வளர்ச்சிகண்டு, 5.82 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், இவற்றின் பயன்பாடு, தற்காலிக புள்ளி விவரத்தின்படி, 4.7 சதவீதம் மட்டும் வளர்ச்சிகண்டு, 5.68 கோடி டன்னாக குறைந்தது.மதிப்பீட்டு காலத்தில், உருக்கு இறக்குமதி, 55.8 லட்சம் டன்னாக குறைந்துள்ள நிலையில், ஏற்றுமதி, 24 சதவீதம் அதிகரித்து, 34.2 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது."சென்ற நிதியாண்டில், உருக்கு பயன்பாடு, 9.9 சதவீதம் வளர்ச்சிகண்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இதன் வளர்ச்சி, 8 சதவீதம் என்றளவில் தான் இருக்கும்' என, மத்திய உருக்குத் துறை செயலர் பி.கே. மிஸ்ரா தெரிவித்தார்."பொருளாதார மந்த நிலையிலிருந்து, பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதையடுத்து, வரும் 2012-13ம் நிதியாண்டில், இதற்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, தனியார் உருக்கு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)