தங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.200 உயர்வுதங்கம் விலை விர்ர்ர்.... சவரனுக்கு ரூ.200 உயர்வு ... தொடரும் மின்வெட்டு பிரச்னையால்அவசர கால மின் விளக்குகளுக்கு மவுசு தொடரும் மின்வெட்டு பிரச்னையால்அவசர கால மின் விளக்குகளுக்கு மவுசு ...
நாட்டின் மறைமுக வரி வசூல் இலக்கு எட்டப்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2012
00:05

புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வசூல் இலக்கு எட்டப்படும் என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தெரிவித்தார்.புதுடில்லியில், சுங்கம் மற்றும் மத்திய கலால் வரி அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், பேசும்போது, " மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி துறையினர், நடப்பு நிதியாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மறைமுக வரி வசூல் இலக்கை எட்டும் வகையில், நடவடிக்கை மேற்கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வசூல் வாயிலாக, 3 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சுணக்க நிலையிலும், இந்த இலக்கை எட்டி விடலாம். ஏனெனில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலுமாக, மறைமுக வரி வசூல், 3 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. மீதமுள்ள தொகையை இரண்டு மாதங்களில் திரட்டி விடலாம். கடந்த ஆண்டு இதே காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில், மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித் துறை, நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த மறைமுக வரியில், 81 சதவீத அளவிற்கு திரட்டி, சாதனை புரிந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதம் என்ற அளவில் இருக்குமென முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது என நிதியமைச்சர் மேலும் கூறினார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதித் துறைச் செயலர் ஆர்.எஸ்.குஜ்ரால் பேசியதாவது:நடப்பு நிதியாண்டில், மத்திய கலால் மற்றும் சுங்கவரித் துறையின் மறைமுக வரி வசூல், 4 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும். நடப்பு நிதியாண்டின் முதல், 10 மாதங்களில், சேவை வரி வசூல், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 37 சதவீதம் அதிகரித்து, 75 ஆயிரத்து 440 கோடி ரூபாயாகவும், கலால் வரி, 6.8 சதவீதம் அதிகரித்து,
1 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. சுங்க வரி, 12.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வசூல் இலக்கை விஞ்சும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)