நாட்டின் மறைமுக வரி வசூல் இலக்கு எட்டப்படும் நாட்டின் மறைமுக வரி வசூல் இலக்கு எட்டப்படும் ... கனிமங்களின் உற்பத்தி மதிப்புரூ.17,286 கோடியாக உயர்வு கனிமங்களின் உற்பத்தி மதிப்புரூ.17,286 கோடியாக உயர்வு ...
தொடரும் மின்வெட்டு பிரச்னையால்அவசர கால மின் விளக்குகளுக்கு மவுசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2012
00:11

சேலம்: தமிழக மக்களுக்கு மின்வெட்டு பிரச்னை, பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றை தொடர்ந்து, மின்வெட்டு பிரச்னை ஓரளவுக்கு குறைந்து காணப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக மீண்டும், அதே நிலை தொடர்ந்து வருகிறது.வணிக நிறுவனங்கள் ஜெனரேட்டர்களையும், வசதி படைத்தவர்கள், தங்கள் இல்லங்களுக்கு யூ.பி.எஸ்., பொருத்தி மின் பிரச்னையை சமாளித்து வருகின்றனர். ஆனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
அவர்களின் சிக்கலுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், சமீபகாலமாக வட மாநிலங்களில் இருந்து, அவசர கால மின் விளக்குகள் (எமர்ஜென்சி லைட்டுகள்) அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. சேலம் புது பஸ் ஸ்டாண்டு மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில், அதிகளவில், அவசர கால விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. 250ல் இருந்து, 1,000 ரூபாய்க்கு மேல் அவசர கால விளக்குகள் விற்பனை செய்யப்படுவதால், அனைத்து தரப்பு மக்களும் அதை வாங்கி செல்கின்றனர்.இதுகுறித்து எமர்ஜென்சி லைட் விற்பனையாளர் கதிரவன் கூறியதாவது:மும்பை, புனே உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான எமர்ஜென்சி விளக்குகள், சேலத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இங்கிருந்து, சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு பலர் கொள்முதல் செய்கின்றனர்.எல்.இ.டி., மற்றும் சி.எப்.எல்., பல்புகள் பொருத்தப்பட்ட எமர்ஜென்சி லைட்டுகள், டியூப் லைட், டார்ச் லைட், சிம்னி விளக்கு வடிவம் என, பல மாடல்களில் விற்பனைக்கு வந்துள்ளது.வீட்டுக்குள் மட்டும் அல்லாமல், பொதுமக்கள், இந்த விளக்குகளை வெளியிலும் எடுத்த செல்லலாம். லைட்டுக்களுக்கான பேட்டரியும் வாரன்டியுடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம், நான்கு மணி நேரம் வரை எமர்ஜென்சி விளக்குகள் எரியும். 250ல் இருந்து, 1,000 ரூபாய்க்கு மேல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.விரைவில், அரசு பொது தேர்வு துவங்கப்பட உள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் பெற்றோர், அதிகளவில், எமர்ஜென்சி லைட்டுக்களை வாங்கி செல்கின்றனர். சமீபகாலமாக இரவு நேரங்களிலும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்னையால், இந்த விளக்குகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கதிரவன் கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)