பதிவு செய்த நாள்
23 பிப்2012
00:13
புதுடில்லி: சென்ற டிசம்பர் மாதத்தில், உள்நாட்டில், 17 ஆயிரத்து 286 கோடி ரூபாய் மதிப்பிற்கு கனிமங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மதிப்பு, சென்ற நவம்பர் மாதத்தில் 15 ஆயிரத்து 692 கோடி ரூபாய் மதிப்பிற்கு இருந்தது என, மத்திய கனிமங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், நிலக்கரி, இரும்புத் தாது, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தோரியம் உள்ளிட்ட, 87 வகையான கனிமங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்த கனிமங்களில், கச்சா எண்ணெய் உற்பத்தி மதிப்பு, 5,725 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பரில், 5,567 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், நிலக்கரி மற்றும் இரும்புத் தாது உற்பத்தி மதிப்பு முறையே, 5,292 கோடி ரூபாய் மற்றும் 3,227 கோடி ரூபாய் என்றளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பரில் முறையே, 4,628 கோடி மற்றும் 2,788 கோடி ரூபாயாக இருந்தது.மேலும், இவைகளின் உற்பத்தியும் முறையே, 11.45 சதவீதம் வளர்ச்சிகண்டு, 4.81 கோடி டன்னிலிருந்து, 5.36 கோடி டன்னாகவும், 8.97 சதவீதம் உயர்ந்து, 1.21 கோடி டன்னிலிருந்து, 1.36 கோடி டன்னாகவும் அதிகரித்துள்ளது.தங்கம் உற்பத்தி, சாதனை அளவாக, 47.41 சதவீதம் உயர்ந்து, 108 கிலோவிலிருந்து, 171 கிலோவாக அதிகரித்துள்ள நிலையில், வைரம் உற்பத்தி, 26.77 சதவீதம் சரிவடைந்து, 1,499 காரட் அளவிலிருந்து, 2,047 காரட்டாக குறைந்துள்ளது.சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், நாட்டில், கனிமங்களின் உற்பத்தி (அணு உலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்கள் தவிர) மதிப்பு, 11.83 சதவீதம் வளர்ச்சிகண்டு, 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|