தொடரும் மின்வெட்டு பிரச்னையால்அவசர கால மின் விளக்குகளுக்கு மவுசுதொடரும் மின்வெட்டு பிரச்னையால்அவசர கால மின் விளக்குகளுக்கு மவுசு ... 28 விமானங்களை இயக்க கிங்பிஷர் நிறுவனம் சம்மதம் 28 விமானங்களை இயக்க கிங்பிஷர் நிறுவனம் சம்மதம் ...
கனிமங்களின் உற்பத்தி மதிப்புரூ.17,286 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2012
00:13

புதுடில்லி: சென்ற டிசம்பர் மாதத்தில், உள்நாட்டில், 17 ஆயிரத்து 286 கோடி ரூபாய் மதிப்பிற்கு கனிமங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மதிப்பு, சென்ற நவம்பர் மாதத்தில் 15 ஆயிரத்து 692 கோடி ரூபாய் மதிப்பிற்கு இருந்தது என, மத்திய கனிமங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், நிலக்கரி, இரும்புத் தாது, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தோரியம் உள்ளிட்ட, 87 வகையான கனிமங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்த கனிமங்களில், கச்சா எண்ணெய் உற்பத்தி மதிப்பு, 5,725 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பரில், 5,567 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், நிலக்கரி மற்றும் இரும்புத் தாது உற்பத்தி மதிப்பு முறையே, 5,292 கோடி ரூபாய் மற்றும் 3,227 கோடி ரூபாய் என்றளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பரில் முறையே, 4,628 கோடி மற்றும் 2,788 கோடி ரூபாயாக இருந்தது.மேலும், இவைகளின் உற்பத்தியும் முறையே, 11.45 சதவீதம் வளர்ச்சிகண்டு, 4.81 கோடி டன்னிலிருந்து, 5.36 கோடி டன்னாகவும், 8.97 சதவீதம் உயர்ந்து, 1.21 கோடி டன்னிலிருந்து, 1.36 கோடி டன்னாகவும் அதிகரித்துள்ளது.தங்கம் உற்பத்தி, சாதனை அளவாக, 47.41 சதவீதம் உயர்ந்து, 108 கிலோவிலிருந்து, 171 கிலோவாக அதிகரித்துள்ள நிலையில், வைரம் உற்பத்தி, 26.77 சதவீதம் சரிவடைந்து, 1,499 காரட் அளவிலிருந்து, 2,047 காரட்டாக குறைந்துள்ளது.சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், நாட்டில், கனிமங்களின் உற்பத்தி (அணு உலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்கள் தவிர) மதிப்பு, 11.83 சதவீதம் வளர்ச்சிகண்டு, 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.



Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)