கனிமங்களின் உற்பத்தி மதிப்புரூ.17,286 கோடியாக உயர்வுகனிமங்களின் உற்பத்தி மதிப்புரூ.17,286 கோடியாக உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு ...
28 விமானங்களை இயக்க கிங்பிஷர் நிறுவனம் சம்மதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2012
10:17

புதுடில்லி: தினமும் 28 விமானங்களை இயக்க, கிங் பிஷர் நிறுவனம் முன்வந்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக, கிங் பிஷர் நிறுவனம் கடந்த ஆறு நாட்களாக, பல விமான சர்வீஸ்களை ரத்து செய்துள்ளது. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விமானத் துறை டைரக்டர் ஜெனரலின் நிர்பந்தத்தின்படி, தற்போது 28 விமானங்களை கொண்டு, 170 சர்வீஸ்களை நடத்த, கிங் பிஷர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விமான எரிபொருளை நேரடியாக வாங்கிக் கொள்ளவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகரித்து கொள்ளவும், மத்திய அரசின் அனுமதியை, இந்நிறுவன அதிபர் விஜய் மல்லையா கோரியிருந்தார். ஆனால், தனியார் விமான போக்குவரத்து எந்த உதவியும் செய்ய முடியாது என, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் தெரிவித்திருந்தார். முன்னறிவிப்பு இல்லாமல், விமான சர்வீஸ்களை ரத்து செய்த இந்நிறுவனத்துக்கு, விமானத் துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து, கிங் பிஷர் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட சில வங்கிகள், கிங் பிஷர் நிறுவனத்துக்கு கடன் உதவி அளிக்க முன் வந்துள்ளன. கிங் பிஷர் நிறுவனத்துக்கு கடனுதவி அளிக்கும் திட்டத்துக்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் விடுத்துள்ள அறவிப்பில் கிங்பிஷர் நிறுவனம் ரூ40 கோடி வரி பாக்கிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)