பதிவு செய்த நாள்
23 பிப்2012
12:46
மிக குறைந்த விலை காரான டாடாவின் நானோ கார்களை இறக்குமதி செய்ய வங்கதேசத்தின் நிட்டோல் நிலாய் குழுமம் திட்டமிட்டுள்ளது. துவக்கத்தில் 2,000 கார்களை இறக்குமதி செய்ய உள்ள இந்நிறுவனம், வரவேற்பை பொறுத்து ஆண்டுக்கு 10,000 கார்களாக உயர்த்தும் என தெரிகிறது. இதற்காக நானோ கார் பாகங்களின் இணைப்பு பணிகளுக்கான தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் இந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திட்டமிடப்பட்ட கார் இறக்குமதி, விலை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வரும் மார்ச் மாதத்திற்கு தள்ளிப் போடப்பட்டது. தரம் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக ஜப்பானிலிருந்து பழைய கார்களை வாங்கி பயன்படுத்தி வந்த வங்காளதேச மக்கள் அவற்றின் அதிக விலை காரணமாக நானோ கார்களை விரும்ப தொடங்கியுள்ளனர். அங்கு நானோ கார்களின் விலை 5 லட்சம் டாக்காவாக (ரூ.3 லட்சம்) இருக்கும் என தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|