பதிவு செய்த நாள்
25 பிப்2012
15:36
புதுடில்லி : மத்திய அரசு ஆகாஷ் என்ற பெயரில் டேப்லெட் பிசிக்களை அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி. எஸ்.என்.எல்.) நிறுவனம் சத்தமின்றி 3 வகை டேப்லெட் பிசிக்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 3,250 மற்றும் ரூ. 10,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள டேப்லெட் பிசிக்கள், 7 இஞ்ச் திரையுடனும், ஆண்ட்ராய்ட் 2.3 ஆபரேடிங் சிஸ்டத்துடனும், ரூ. 13,500 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள டேப்லெட் பிசி 8 இஞ்ச் திரையுடனும் உள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனம், நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பான்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்த டேப்லெட் பிசிக்களை தயாரித்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவன சலுகைகளுடன், இந்த டேப்லெட் பிசிக்கள் வர்த்தகம் செய்யப்பட உள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|