பதிவு செய்த நாள்
26 பிப்2012
01:17

புதுடில்லி : நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற பிப்ரவரி 17ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 5.58 கோடி டாலர் (279 கோடி ரூபாய்) 29 ஆயிரத்து 344 கோடி டாலராக (14 லட்சத்து 67 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 29 ஆயிரத்து 338 கோடி டாலராக (14 லட்சத்து 66 ஆயிரத்து 900 கோடி ரூபாய்) இருந்தது. இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 8.75 கோடி டாலர் அதிகரித்து, 25 ஆயிரத்து 953 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, எவ்வித மாற்றமும் இன்றி, 2,673 கோடி டாலர் என்றளவிலேயே உள்ளது.
எஸ்.டீ.ஆர்.மதிப்பு, 1.93 கோடி டாலர் குறைந்து, 445.50 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 1.24 கோடி டாலர் குறைந்து, 272.20 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|