பதிவு செய்த நாள்
27 பிப்2012
02:36
புதுடில்லி:உரத் துறையின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டுக் கொள்கைக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.உள்நாட்டில், ஆண்டுக்கு, 2.20 கோடி டன் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் உரத்திற்கான தேவை, 2.90 கோடி டன்னாக உள்ளது. பற்றாக்குறையாக உள்ள 70 லட்சம் டன் உரம், இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.
நாட்டின் உரத் தேவையை சமாளிக்கவும், உரஉற்பத்தியை அதிகரிக்கவும், கடந்த, 2008ம் ஆண்டு "புதிய முதலீட்டு கொள்கை' அறிவிக்கப்பட்டது. ஆனால், உரத் துறையில் எதிர்பார்த்தபடி, புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படாததால், இத்திட்டம் தோல்வியடைந்தது.இதையடுத்து, 2010ம் ஆண்டு உர உற்பத்தியை அதிகரிக்க, புதிய கொள்கையை உருவாக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி திட்டக்குழு உறுப்பினர் சவுமித்ரா சட்டர்ஜி தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இக்குழு, புதிய உரத் தொழிற்சாலைகளுக்கும், உர நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கும், ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. இதற்கு அர” ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|