உரத் துறையின் புதிய முதலீட்டுக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்உரத் துறையின் புதிய முதலீட்டுக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் ... உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் உலகின் பணக்காரநாடுகளில் முதலிடம் பிடித்தது கத்தார் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ககல்விக் கடன் வட்டியை குறைக்க திட்டம் : பாரத ஸ்டேட் வங்கி தலைவர் பேட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2012
10:10

திருச்சி : ''கல்விக் கடனுக்கான வட்டியைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்று பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் திருச்சியில் நேற்று கூறினார். திருச்சி வந்த பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் பிரதீப் சௌத்ரி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்.பி.ஐ., வங்கி, ஒரு லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளது. தமிழகத்தில் கல்வி, விவசாயம், சிறுதொழில் கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒன்பது கார்ப்பரேட் கிளைகள் உள்பட, 837 கிளைகள் உள்ளன. 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விவசாயத்துக்கும், 10 ஆயிரம் கோடி வீடு கட்டவும், 2,300 கோடி ரூபாய் கல்விக்காகவும் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில், 1,600 கோடி ரூபாயும், இரண்டாவது காலாண்டில், 2,850 கோடியும், மூன்றாவது காலாண்டில், 3,250 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளோம். நான்காவது காலாண்டில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். வங்கியின் வளர்ச்சி, 25 முதல் 30 சதவீதமாக உள்ளது. 'ரிசர்வ்' வங்கியின் கொள்கை முடிவுப்படி வட்டி வசூலிக்கப்படுகிறது. கல்விக் கடனுக்கான வட்டியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். மற்ற பிரிவுகளில் ரிசர்வ் வங்கி வழிகாட்டல்படி, வட்டி வசூலிப்போம். எஸ்.பி.ஐ., வங்கி முறையாக கணக்குகளை தாக்கல் செய்து வருகிறது. கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் கூட்டமைப்பில், எஸ்.பி.ஐ.,யும் உள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டமைப்பில் பேசி முடிவு செய்யப்படும். சர்வதேச விமான நிறுவனங்களே நிதி நெருக்கடியில் உள்ளன. வீட்டுக்கடன் விண்ணப்பிப்போர் சரியான ஆவணங்களைத் தாக்கல் செய்தால், 4 முதல் 11 நாட்களுக்குள் கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)