பதிவு செய்த நாள்
28 பிப்2012
10:21
புதுடில்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பணிகள் முடிந்ததும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயரலாம். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:பெட்ரோல் விலையை கடந்த டிசம்பர் முதல் தேதி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதன்பின், ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடவடிக்கைகள் துவங்கி விட்டதால், விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் தற்போது, பெட்ரோல் விற்பனையில், லிட்டருக்கு ரூ.4 நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. கடந்த டிசம்பர் முதல் தேதி பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் மட்டும், எண்ணெய் நிறுவனங்களுக்கு 900 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்ததும், பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம்.பெட்ரோல் விலையுடன் டீசல் விலையும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில், எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விற்பனை தற்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.12.77ஐயும், கெரசின் விற்பனையில் ரூ.30.21ம், சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையில், ரூ.378ம் இழப்பைச் சந்திக்கின்றன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|