பதிவு செய்த நாள்
02 மார்2012
00:05
மும்பை,: ஓ.என்.ஜி.சி. நிறுவனம், நேற்று ஏல முறையில் மேற்கொண்ட பங்கு விற்பனை மூலம், 8,500 கோடி ரூபாய் திரட்டியது. இது இலக்கு அளவான 12 ஆயிரத்து 500 கோடியைவிட 4,000 கோடி குறைவாகும்.பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான ஏலம், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்றது.காலை 9.15 முதல் மாலை 3.30 மணி வரை நடைபெற்ற இந்த ஏலம் மூலம், 42.77 கோடி பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 68.3 சதவீத (29.22 கோடி) பங்குகள் மட்டுமே ஏலம் போயின. இதன் மூலம் 8.500 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.இந்த ஏலத்தில் பங்கின் விலை 290 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் மும்பை பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில், இதன் பங்கின் விலை, முந்தைய நாளைவிட 1.87 சதவீதம் குறைந்து 287.85 ரூபாயில் முடிவடைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|